உலகம்

போதைப்பொருளுடன் அமெரிக்கா நோக்கி பயணித்த நீர்மூழ்கி கப்பல்!

அமெரிக்காவை நோக்கி போதைப்பொருட்களுடன் பயணித்த நீர்மூழ்கிக் கப்பலை அழிக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump)  தனது ட்ரூத் சோசியல் மீடியா  (Truth Social Media) பக்கத்தில் இட்டுள்ள பதிவில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அதில் அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் கப்பலில் போதைப்பொருள் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கப்பலில் நான்கு அறியப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருந்ததாகவும், அவர்களில் இருவர் கடற்படையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பிட்ட நீர்மூழ்கிக் கப்பல் நிலத்தை அடைந்திருந்தால், குறைந்தது 25,000 அமெரிக்கர்கள் தங்கள் உயிரைக் கொடுத்திருப்பார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் குறித்த கப்பலில் மீதம் இருந்தவர்கள் அவர்களின் சொந்த நாடான  ஈக்வடோர் (Ecuador) மற்றும் கொலம்பியாவுக்கு (Colombia) திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!