இந்தியா

தண்டவாளத்தில் ரீல்ஸ் எடுக்க ஆசைப்பட்டு பலியான சிறுவன் (வீடியோ)

தெலுங்கானாவில் தண்டவாளத்தில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுக்க சென்ற சிறுவன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த முகமது சர்பாராஸ் என்ற 16 வயது சிறுவன், இன்ஸ்டாகிராம் மீது மோகம் கொண்டுள்ளார்.சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பதிவிட்டு வெளியிட்டு அதில் பிரபலம் அடைவதை விரும்பிய சர்பாராஸ், ரீல்ஸ் எடுக்க முயன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கடந்த புதன் கிழமையன்று மதிய வேளையில் தன் பெற்றோரிடம் தொழுகைக்கு செல்கிறேன் என கூறி விட்டு நண்பர்களுடன் வெளியே சென்றுள்ளார்.சர்பாராஸ் தனது நண்பர்களான முஸ்மில் மற்றும் செளஹால் ஆகியோருடன், அருகே உள்ள ரயில் தண்டாவளத்திற்கு சென்றுள்ளனர்.

பின்னர் அங்கு ரயில் வரும் சமயத்தில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் எடுக்க வேண்டுமென சர்ப்பராஸ் கூறியதும், அதற்கு நண்பர்கள் வேண்டாமென தடுத்தும் வீடியோ எடுக்க முயன்றுள்ளார்.சரியாக ரயில் வரும் சமயத்தில் தண்டவாளத்தின் முன் நின்று, வீடியோ எடுக்க முயல தவறுதலாக அவர் ரயிலில் அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!