உலகம்

சேனல் தீவுகளுக்கு அருகே உல்லாசக் கப்பலிலிருந்து கடலில் விழுந்த பெண் மரணம்!

உல்லாசக் கப்பலில் இருந்த ஒரு பெண் பயணி, சேனல் தீவுகள் அருகே கடலில் விழுந்ததை அடுத்து உயிரிழந்துவிட்டார் என்று பிரெஞ்சு மீட்புப் பணியினர் தெரிவித்துள்ளனர்.

கிட்டத்தட்ட 6,300க்கும் மேற்பட்டோர் பயணம் செய்யக்கூடிய ‘எம்எஸ்சி வெர்ச்சுவோசா’ (MSC Virtuosa) உல்லாசக் கப்பலில், அக்டோபர் 12ஆம் திகதி தமது 20களில் உள்ள பெண் ஒருவரைக் கண்டுபிடிக்குமாறு தகவல் கிடைத்தது.

பயணி ஒருவர் கடலில் விழுந்துவிட்டது குறித்து எச்சரிக்கை ஒலி மூன்று முறை ஒலித்ததாக பிபிசி செய்தி நிறுவனத்திடம் பயணி ஒருவர் தெரிவித்தார்.

இதையடுத்து கடலில் விழுந்த பெண்ணை ஹெலிகாப்டர் பணியாளர்கள் சிலர் மீட்டதாகவும் பெண் இறந்துவிட்டதைப் பின்னர் மருத்துவர்கள் உறுதிசெய்ததாகவும் பிரெஞ்சு தேடி மீட்கும் படையினர் குறிப்பிட்டனர்.

காணாமல் போன ஒரு பயணியைத் தேடி வருவதால் கப்பல் சவுத்ஹேம்டனில் தாமதமாகும் என்று உல்லாசக் கப்பலை இயக்கியவர் பயணிகளுக்குத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

பிரெஞ்சு காவல்துறையினர் தலைமையில் பெண்ணின் மரணம் குறித்த விசாரணை நடந்து வருகிறது.

உல்லாசக் கப்பல் 19 மாடிகள் உயரம் என்றும் பிரான்சில் 2020ல் கட்டப்பட்டது என்றும் அறியப்படுகிறது.

(Visited 3 times, 3 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content