ஆசியா செய்தி

சிங்கப்பூரில் புதிய திட்டத்திற்கு தயாராகும் அரசாங்கம்

சிங்கப்பூரில் உடற்பயிற்சித் துறையின் தரத்தை அதிகரிக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

அதற்காக உடற்பயிற்சி நிபுணர்களை உள்ளடக்கிய தேசியப் பதிவகம் ஒன்றை அடுத்த மாதம் அறிமுகப்படுத்தவுள்ளதாக கலாசார, சமூக, இளையர் துறைகளுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் Eric Chua தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அரசாங்க அமைப்புகள் பதிவுசெய்திருக்கும் உடற்பயிற்சி நிபுணர்களுடன் மட்டுமே இணைந்து பணியாற்றும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உடற்பயிற்சி நிபுணர்கள் மத்தியில் சீரான தன்மை இருப்பதை இந்தத் திட்டம் உறுதிசெய்யும், என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பதிவுசெய்வது கட்டாயமல்ல என்றபோதிலும் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு அனைத்து உடற்பயிற்சி நிபுணர்களையும் பதிவு செய்ய ஊக்குவிக்கிறது.

பொதுமக்கள் அந்தப் பதிவகத்தை அணுகி அவர்களது தேவைக்கேற்ப உடற்பயிற்சி நிபுணர்களைத் தெரிவுசெய்யலாம் என்றும் அமைச்சு கூறியது.

ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2024 வரை பதிவு செய்வோருக்கு முதல் ஆண்டில் தேசியப் பயிற்றுவிப்பாளர்கள் சங்கத்துடன் இலவச உறுப்பியம் கிடைக்கும்.

 

(Visited 2 times, 1 visits today)
Avatar

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content