அரசியல் இலங்கை செய்தி

இலங்கையை உலுக்கிய அறகலயவின் பின்னணியின் அமெரிக்க தூதுவர்: பகீர் குற்றச்சாட்டு முன்வைப்பு!

இலங்கையில் நடந்த “அறகலய”வுக்குரிய திரைக்கதை மற்றும் தயாரிப்பு என இரு பணிகளையும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவரே முன்னெடுத்தார் என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில Udaya Gammanpila குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார்.

“2022 அறகலயவின்போது திரைக்கதை மற்றும் தயாரிப்பு ஆகிய இரு பணிகளையும் அமெரிக்க தூதுவரே செய்திருந்தார்.

மிகவும் சூட்சுமமான முறையிலேயே இது நடந்துள்ளது. அமெரிக்க திரைக்கதை என தெரியாமல் எமது இளைஞர்கள் எமது நாட்டு தேசிய கொடியுடன் களமிறங்கும் நிலை காணப்பட்டது.

2024 இல் 3 சதவீத வாக்கு வங்கியுடன் இருந்த தேசிய மக்கள் சக்தியை ஆட்சியை பிடிக்கும் சக்தி என்ற நிலைக்கு விம்பம் ஏற்படுத்திய பிரதான சூத்திரதாரியும் அமெரிக்க தூதுவர்தான்.

ஜே.வி.பினரை தனது செல்லப்பிள்ளையாக மாற்றிக்கொண்டதுதான் தனது சேவைகாலத்தில் ஜுலி சங், பெற்ற மிகப்பெரிய வெற்றியாகும். “ –என உதய கம்மன்பில மேலும் குறிப்பிட்டார்.

இலங்கையில் கோட்டாபய ஆட்சியின்போது வெடித்த மக்கள் போராட்டமே அறகலய எனக் கூறப்படுகின்றது.

அக்காலப்பகுதியில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக, ஜுலி சங் செயல்பட்டார். 4 வருடங்களுக்கு பிறகு தனது இராஜதந்திர சேவைகளை முடித்துக்கொண்டு அவர் நேற்று விடைபெற்றார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!