இந்தியாவில் இருமல் மருந்தை உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் – ஒருவர் கைது!
இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்தை உட்கொண்ட 21 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பில் குறித்த மருந்தை தயாரித்த நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று அதிகாலை அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்திய சுகாதார அமைச்சு கடந்த சனிக்கிழமை சிரப் மாதிரிகளில் நடத்திய சோதனைகளில் இருமல் மருந்தில் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் டைதிலீன் கிளைகோல் (DEG) என்ற நச்சு இரசாயனம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கரைப்பான்களில் பயன்படுத்தப்படும் […]




