இலங்கை: காணாமல் போன பெண்ணை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸார்!

2023 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் திகதி முதல், மத்தேகொட பிரதேசத்தில் இருந்து காணாமல் போனதாகக் கூறப்படும் 59 வயதுடைய பெண் ஒருவரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
காணாமல் போன பெண்ணின் கணவனால் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து மத்தேகொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இது தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், 071 8592207 அல்லது 011-2783776 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)