ஐரோப்பா

ஸ்வீடனில் துப்பாக்கிச்சூடு – 06 பேர் படுகாயம் !

ஸ்வீடனின்  Gävle என்ற நகரில்  இன்று  இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 06 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் 14 வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உணவகங்கள், மதுபான கூடங்கள் நிறைந்த பரபரப்பான சாலையில் இந்த  துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் 18 வயதிற்கு உட்பட்ட 06 இளைஞர்கள் படுகாயம் அடைந்துள்ளதுடன்,  அவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு  செல்லப்பட்டுள்ளதாக  பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தாக்குதல்தாரியான 14 வயது சிறுவன்  விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் எந்த குற்றவியல் குழுவுடனும் தொடர்பில் இருக்கவில்லை என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சுமார் 80,000 மக்கள் வசிக்கும் கேவ்லே (Gävle) , ஸ்டாக்ஹோமிலிருந்து வடக்கே 86 மைல் தொலைவில் உள்ளது. அத்துடன் ஸ்வீடனின் 13வது பெரிய நகரமாகவும் காணப்படுகிறது. 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!