ஆஸ்திரேலியா இன்றைய முக்கிய செய்திகள்

ஆஸ்திரேலியாவில் விமானத்தில் பயணித்த தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி

ஆஸ்திரேலிய தம்பதியின் Qatar Airways விமானப் பயணம் சடலத்தால் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மிட்செல்லும் ஜெ்னிஃபரும் மெல்பர்னிலிருந்து டோஹாவுக்குச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களுக்கு அருகிலிருந்த பெண் பயணி எதிர்பாராவிதமாக உயிரிழந்துள்ளார.

விமான ஊழியர்கள் பெண்ணின் சடலத்தைத் தம்பதியின் அருகே வைத்திருந்தனர். ஜெனிபர் இடம் மாறினார். ஆனால் மிட்செல்லுக்கு வேறு இடம் ஒதுக்கப்படவில்லை.

எஞ்சிய விமானப் பயணம் முழுவதும் அவர் சடலத்திற்கு அருகே அமர்ந்திருந்ததாக தெரியவந்துள்ளது. விமானத்தில் பல இருக்கைகள் காலியாக இருந்தும்கூட விமான ஊழியர்கள் அவரது இடத்தை மாற்றவில்லை என்று தம்பதி குறைகூறினர்.

அதுபோக அவர்கள் இருவருக்கும் எந்தவித ஆதரவும் கொடுக்கப்படவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் பயணிகளுக்கு ஆதரவு வழங்கப்படவேண்டும் என்று இருவரும் கேட்டுக்கொண்டனர்.

விமானப் பயணம் அவர்களைப் பெருமளவில் பாதித்ததாக ஜெனிபர் கூறினார்.

“விமானத்தில் மாண்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். சம்பவத்தினால் ஏதேனும் தடங்கலோ சிரமமோ ஏற்பட்டிருந்தால் அதற்கு மன்னிப்புக் கேட்கிறோம். பயணிகளைத் தொடர்புகொள்வோம்,” என்று Qatar Airways விமான நிறுவனம் தெரிவித்தது.

(Visited 118 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித