இலங்கை

இலங்கையில் அதிக வெப்பநிலையால் குடிநீர் இன்றி மக்கள் சிரமம்

இலங்கை முழுவதும் நிலவும் வெப்பமான காலநிலையால், பல பகுதிகளில் மக்கள் தற்போது குடிநீர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.

அதற்கமைய, இரண்டாயிரத்து 278 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களிலேயே மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

சில பகுதிகளில் தாங்கி ஊர்திகளைப் பயன்படுத்தி மக்களுக்குக் குடிநீர் விநியோகிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்