ஐரோப்பா

நெதர்லந்தில் புதிய நடைமுறை – பிள்ளைகளின் மதிப்பெண்களைப் பெற்றோர் தெரிந்துகொள்ள தடை

நெதர்லந்தில் பாடசாலை ஒன்றில் பிள்ளைகளின் மதிப்பெண்களைப் பெற்றோர் தெரிந்துகொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிள்ளைகளின் அனைத்து மதிப்பெண்களையும் பெற்றோருடன் பகிரும் ஒரு செயலியை Jordan – Montessori Lyceum Utrecht பாடசாலை பயன்படுத்துகிறது.

அதனால் பிள்ளைகளிடையே மன உளைச்சல் அதிகரிப்பதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அடிக்கடி செயலியைப் பயன்படுத்தாத பெற்றோருடைய பிள்ளைகளின் மன உளைச்சல் குறைவாக உள்ளதென குறிப்பிடப்படுகின்றது.

இதற்கு மாறாகப் பெற்றோர் அடிக்கடி செயலியைப் பயன்படுத்தினால் பிள்ளைகளின் மன உளைச்சல் அதிகமாவதாக பாடசாலை ஆசிரியர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதைக் கட்டுப்படுத்த ஒரு மாதத்திற்குப் பெற்றோருடன் பிள்ளைகளின் மதிப்பெண்கள் பகிரப்படமாட்டாதென குறிப்பிடப்படுகின்றது.

அந்த முடிவுக்குப் பெரும்பாலான பெற்றோரும் பிள்ளைகளும் ஆதரவு அளித்தனர்.

(Visited 39 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!