ஐரோப்பா

ஜேர்மனியில் மில்லியன் கணக்கில் முதலீடு செய்யும் மைக்ரோசொப்ட் நிறுவனம்!

செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் துறையில் அதன் டேட்டா சென்டர் திறன்களை பெருமளவில் விரிவுபடுத்த ஜேர்மனில் முதலீடு செய்யவுள்ளதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

மைக்ரோசாப்ட் தலைவர் பிராட் ஸ்மித், Scholz உடனான விளக்கக்காட்சி பேர்லினில் இடம்பெற்றபோது இதற்கான அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஜெர்மனியில் கிட்டத்தட்ட 3.3 பில்லியன் யூரோக்கள் ($3.5 பில்லியன்) முதலீடு செய்யப்போவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை ஜேர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் வரவேற்றார்.

“இந்த வாய்ப்புகளுக்கான அடிப்படையாக முன்னேற்றம், வளர்ச்சி, நவீனத்துவம் மற்றும் உலகளாவிய வெளிப்படைத்தன்மைக்கு இது ஒரு நல்ல அர்ப்பணிப்பாகும்,” என்று ஜேர்மன் அதிபர் கூறியுள்ளார்.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!