ஐரோப்பா

ஜெர்மனி மக்களுக்கு வீட்டு உதவி தொகை அதிகரிப்பு

ஜெர்மனி மக்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற வீட்டு உதவி தொகை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு தொடக்கம் ஜெர்மனியில் வீடுகளுக்கு அரசாங்கம் வழங்கும் நிதி உதவியானது அதிகரிக்கப்பட்டு இருந்தது.

அதாவது இதுவரை காலங்களும் ஜெர்மனியில் வீட்டு உதவி தொகையை பெறுகின்றவர்களுடைய எண்ணிக்கையானது 72 சதவீதமாக அதிகரித்துள்ளதாக புள்ளி விபரம் வெளியாகியுள்ளது.

தற்பொழுது ஜெர்மன்யில் மொத்தமாக 2 மில்லியன் பேர் இவ்வாறு மேலதிக பணத்தை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக்கொள்வதாக தெரியவந்திருக்கின்றது.

இந்நிலையில் வீட்டு உதவி தொகையை பெறுகின்றவர்களின் மொத்த எண்ணிக்கையானது 72 சதவீதமாக உயர்ச்சியடைந்துள்ளது. இதேவேளையில் 2022 ஆம் ஆண்டு இந்த வீட்டு உதவி தொகை 200 யுரோவாக இருந்ததாகவும், 2023 ஆம் ஆண்டு இந்த தொகையானது சராசரியாக 358 யுரோவாக உயர்ச்சியடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இந்த அதிகரிப்பானது 2024 ஆம் ஆணடில் இருந்து நடைமுறைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!