சாம்பியன்ஸ் டிராபியின் சிறந்த அணியை உருவாக்கிய ICC

பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வந்த 8 அணிகள் இடையிலான 9வது ICC சாம்பியன்ஸ் டிராபி தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.
இந்நிலையில் இந்த தொடரில் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்திய வீரர்களை கொண்டு சிறந்த அணியை உருவாக்கி ICC அறிவித்துள்ளது.
சான்ட்னர் தலைமையிலான அந்த அணியில் 5 இந்திய வீரர்கள், 4 நியூசிலாந்து மற்றும் 2 ஆப்கானிஸ்தான் வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
ரச்சின் ரவீந்திரா, இப்ராகிம் சத்ரன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், கிளென் பிலிப்ஸ், அஸ்மத்துலா ஒமர்சாய், மிட்செல் சாண்டர் (கேப்டன்), முகமது சமி, மேட் ஹென்றி, வருண் சக்ரவர்த்தி.
(Visited 2 times, 1 visits today)