இலங்கை

பயங்கரவாத திருத்தச் சட்டமூலத்தில் முன்மொழிகளை ஏற்க தயார் – பந்துல குணவர்த்தன!

  • April 25, 2023
  • 0 Comments

மக்களின் உயிரைப் பாதுகாத்து தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தல் மற்றும் பயங்கரவாதமற்ற நாட்டை உருவாக்குவதே உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை அறிமுகப்படுத்துதற்கான நோக்கமாகும். அதில் பொறுத்தமான திருத்த முன்மொழிவுகளை ஏற்க அரசாங்கம் தயாராக உள்ளது என  அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர்,  உத்தேச புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தொடர்பில் நீதி அமைச்சர் விஜேதாச […]

ஆசியா

வடமேற்கு பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு – 8 பேர் படுகாயம்!

  • April 25, 2023
  • 0 Comments

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள காவல் நிலையத்தில் இடம்பெற்ற இரண்டு குண்டுவெடிப்பு சம்பவங்களில், 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர். அலுவலகத்தில் பழைய வெடி மருந்து இருப்பு இருந்ததாகவும் அது வெடிப்புச் சம்பவங்களுக்குக் காரணமா அல்லது பயங்கரவாதத் தாக்குதலா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக அம்மாகாண காவல்துறைத் தலைவர் அக்தர் ஹயாத் கூறினார். மேலும் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் காவல்துறை பயங்கரவாத எதிர்ப்பு துணை அதிகாரிகள் என்று ஹயாத் கூறினார். படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் […]

இலங்கை

கனடாவிலிருந்து இலங்கைக்கு வந்த ஆபத்தான பொருள்! கைப்பற்றிய சுங்க அதிகாரிகள்

  • April 25, 2023
  • 0 Comments

கொழும்பு, பேலியகொடயிலுள்ள களஞ்சியம் ஒன்றில் பணிபுரியும் சுங்க அதிகாரிகள் குழுவொன்று ‘குஷ்’ என அழைக்கப்படும் அமெரிக்க கஞ்சாவை இன்று கைப்பற்றியுள்ளது. இந்தக் கஞ்சா இரண்டு மரப்பெட்டிகளில் மறைத்து கனடாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டதாக அந்த அதிகாரிகள் கூறினர். இந்நிலையில் குறித்த மரப்பெட்டிகள் தொடர்பில் அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு முகவரியிடப்பட்டிருந்த இந்தப் பெட்டிகளைத் திறந்து பார்த்தபோது அவற்றில் அமெரிக்க கஞ்சா காணப்பட்டதகையடுத்து அவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் சந்தேகத்தின் பேரில் […]

ஆசியா

சீனாவில் பாலத்தின் மீது கட்டப்பட்ட கண்கவர் கிராமம்; வெளியான பின்னணி

  • April 25, 2023
  • 0 Comments

சீனாவின் சோங்கிங் என்ற இடத்தில் இருக்கும் பாலம் அதன் தனித்துவமான அமைப்புக்காக புகழ்பெற்றது. இங்கு ஒரு முழு கிராமமும் ஒரு பாலத்தின் மேல்தான் கட்டப்பட்டிருக்கின்றன. லிசியாங் நதியின் மேல் இருக்கும் இந்த கிராமம் நவீன கட்டிடக்கலையின் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இதில் சீன மற்றும் மேற்கத்திய கட்டடக்கலையில் அமைந்த கட்டடங்கள் இருக்கின்றன.ஏன் ஒரு பாலத்தின் மீது கிராமத்தை அமைக்க வேண்டும் என்ற கேள்வி இருக்கலாம். சீன அரசானது முழுக்க முழுக்க சுற்றுலாப் பயணிகளைக் கவரும் நோக்கத்திலேயே இந்த […]

ஐரோப்பா

கைது செய்யப்படும் அச்சத்தில் நாடொன்றிற்கு செல்லத் தயங்கும் புடின்!

  • April 25, 2023
  • 0 Comments

ஆகஸ்ட் மாதம் தென்னாப்பிரிக்காவில் BRICS மாநாடு நடைபெற உள்ள நிலையில், அந்த மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்றால், தான் கைது செய்யப்படலாம் என புடின் அஞ்சுவதாக கூறப்படுகிறது. சமீபத்தில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், உக்ரைனில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களுக்காக புடினைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பித்துள்ளது.அதன்படி, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஒப்பந்தத்தின் கீழிருக்கும் ஏதாவது ஒரு நாட்டில் கால் வைத்தால், அவரை அந்த நாடு கைது செய்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கவேண்டும். இந்நிலையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஒப்பந்தத்தின் […]

இலங்கை

தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பில் நீதிமன்றம் விடுத்துள்ள புதிய உத்தரவு!

  • April 25, 2023
  • 0 Comments

கோடீஸ்வர வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பில் சிரேஷ்ட கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸின் மரபணு பரிசோதனை அறிக்கையை பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய, அரச இரசாயனப் பகுப்பாய்வகத்தின் பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார். ஷாஃப்டரின் மரணம் தொடர்பான வழக்கு நேற்று (24) நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் இந்த உத்தரவை பிறப்பித்தார். இச் சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட கொழும்பு பல்கலைக்கழகத்தின் தடயவியல் மருத்துவப் பேராசிரியர் அசேல மெண்டிஸ் தலைமையிலான ஐவரடங்கிய நிபுணர் […]

இலங்கை

இலங்கையில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் பரவிய தொற்று – ஒருவர் பலி

  • April 25, 2023
  • 0 Comments

இலங்கையில் மலேரியாவினால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. பல ஆண்டுகளுக்குப் பின்னர் மலேரியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். மாணிக்கக்கல் தொடர்பான வர்த்தக நோக்கத்துக்காக  தன்சானியாவுக்குச் சென்று திரும்பிய களுத்துறை பேருவளை சீனன்கோட்டை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. அவர் ஏப்ரல் 10 ஆம் திகதி  அன்று இலங்கைக்குத் திரும்பினார். பின்னர் நான்கு நாட்கள் காய்ச்சலுடன் தனது வீட்டில் இருந்தார். ஏப்ரல் 14 ஆம் திகதி தனியார் வைத்தியாலையில் […]

வாழ்வியல்

ஜிம் செல்பவரா நீங்கள்? தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள்

  • April 25, 2023
  • 0 Comments

மிடுக்கான உடலை பெற விரும்பி இன்று பலரும் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வது வழக்கமாகி வருகிறது. ஜிம்முக்கு செல்வோர் எதை செய்யலாம் எதை தவிர்க்க வேண்டும் என்று தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். பயிற்சிகள் முறைகள், பயிற்சி நேரம் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ளாமல் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வது மரணத்தில் கூட சென்று முடியலாம். ஜிம்முக்கு செல்வோர் அல்லது செல்ல விரும்புவோர் கீழ்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் உடற்காயம், மாரடைப்பு, ஸ்ட்ரோக், சுயநினைவிழப்பு ஆகியவற்றில் இருந்து தங்களை தற்காத்துக் […]

செய்தி

அமெரிக்காவில் இசைவிருந்து நிகழ்ச்சியில் பரபரப்பு – 9 பேர் படுகாயம்

  • April 25, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் இசைவிருந்து நிகழ்ச்சியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் படுகாயமடைந்துள்ளனர். அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தின் ஜாஸ்பர் நகரின் வடக்கே உள்ள கவுண்டி ரோடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தின இரவு இசைவிருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பொழுது திடீரென அங்கு வந்த மர்ம நபர்கள் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 9 பேர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து இந்த துப்பாக்கிச் […]

வட அமெரிக்கா

3 முறை ஒரே எண்களை வைத்து அதிர்ஷ்டக் குலுக்கில் வெற்றிபெற்ற அமெரிக்கர்!

  • April 25, 2023
  • 0 Comments

அமெரிக்காவின்  Maryland பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு தொடர் அதிஷ்டம் கிடைத்துள்ளது. அவர் 11 மாதங்களில் அதே எண்களைக் கொண்ட அதிர்ஷ்டக் குலுக்குச் சீட்டை வாங்கி 3 முறை வெற்றி பெற்றுள்ளார். இம்முறை அவர் 50,000 அமெரிக்க டொலர் பரிசுத் தொகையை வென்றுள்ளார். 52 வயதுடைய அந்த நபர் ஏப்ரல் 13 ஆம் திகதி நடந்த “Pick Five” எனும் அதிர்ஷ்டக் குலுக்கில் வென்ற பரிசுத் தொகையை அண்மையில் பெற்றார். வெற்றி பெற்ற எண்கள்: 4, 8, […]

error: Content is protected !!