எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மே தின அணிவகுப்பை ரத்து செய்த கியூபா
கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கியூபாவின் கம்யூனிஸ்ட் அரசாங்கம் பாரம்பரிய மே தின அணிவகுப்பை ரத்து செய்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நூறாயிரக்கணக்கான மக்கள் சர்வதேச தொழிலாளர் தினத்தன்று ஹவானாவின் புரட்சி சதுக்கத்தை நிரப்புவதற்காக தீவு முழுவதிலும் இருந்து பஸ்ஸில் வருகிறார்கள். 1959 புரட்சிக்குப் பிறகு பொருளாதார காரணங்களுக்காக கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்படுவது இதுவே முதல் முறை. சமீப வாரங்களாக பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகள் உருவாகி, பல நாட்களாக வாகன ஓட்டிகள் காத்திருக்கின்றனர். இந்த மாத தொடக்கத்தில், […]













