செய்தி தமிழ்நாடு

பெண்களுக்கான மாரத்தான் போட்டி

  • April 14, 2023
  • 0 Comments

மதுரை காந்தி மியூசியத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மதுரை  ஐஸ்வர்யம் ட்ரஸ்ட் சார்பில் மருத்துவ விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில்  பெண்களுக்கான மாரத்தான் போட்டி நடைபெற்றது., ஐந்து கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற இப்போட்டியில் 18  வயது முதல் 60 வயது வரை உள்ள பெண்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஸ்ரீமதி அவர்கள்,, காவல்உதவி ஆணையர் ஆறுமுகசாமி அவர்கள்,மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் அவர்கள், […]

செய்தி தமிழ்நாடு

ஜி பே மூலம் லஞ்சம் வாங்கிய மணிமங்கலம் போலீசார் 2 பேர் கைது

  • April 14, 2023
  • 0 Comments

தாம்பரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி, குற்றவாளிகளான காவலர்களை வன்மையாக கண்டித்ததோடு, அவர்களின் சர்விஸ் காலத்தில், இதைப் போன்ற அத்துமீறர்களில் ஈடுபட்டார்களா? என்று முழுமையாக விசாரிக்க போலீஸ் உதவி ஆணையருக்கு உத்தரவு. சென்னை தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லையில் உள்ள கூடுவாஞ்சேரியில் வசிப்பவர் கிருஷ்ணன் 30. இவருக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது. இவருடைய உறவுக்காரப் பெண் ஒருவருக்கும் கிருஷ்ணனுக்கும் திருமணம் நிச்சயம் முடிந்துள்ளது. இந்தநிலையில் தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட உறவுக்கார பெண்ணுடன், கிருஷ்ணன் நேற்று இரவு […]

செய்தி தமிழ்நாடு

தமிழகத்தில் இன்புளுயன்சா வைரஸ் தொற்றுக்கு முதல் உயிரிழப்பு பதிவு!

  • April 14, 2023
  • 0 Comments

தமிழகத்தில் இன்புளுயன்சா வைரஸ் தொற்றுக்கு முதல் உயிரிழப்பு பதிவு! தமிழகத்தில் இன்புளுயன்சா வைரஸ் தொற்றின் முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெங்கள10ரில் பணியாற்றி வந்த திருச்சியை சேர்ந்த 27 வயது இளைஞர் கோவாவுக்கு சுற்றுலா சென்று கடந்த 9ஆம் திகதி ஊருக்கு திரும்பியுள்ளார். பின்னர் அவர் மூச்சுத்திணறல், வாந்தி மயக்கம் உள்ளிட்ட அறிகுறிகளுடன் ஒரு வாரமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். […]

செய்தி தமிழ்நாடு

போலீசாரை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்ய முயற்சி

  • April 14, 2023
  • 0 Comments

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திகுப்பம் ஊராட்சியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் அருகே மூடப்பட்ட நிலையில் ஏசிஎல் தனியார் தொழிற்சாலையில் பழைய இரும்புகளை திருடுவதற்காக வந்த சிலர் தொழிற்சாலையில் காவல் பணியில் ஈடுபட்டு வந்த வழுதலம் பேடு கிராமத்தைச் சேர்ந்த முத்து (வயது 56) என்பவரை கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து காவலர் முத்து அளித்த புகாரின் அடிப்படையில் பெத்திகுப்பம் ஊராட்சியில் அமைந்துள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்க வெளியுறவுத் துறையின் 2022 மனித உரிமைகள் அறிக்கையை முற்றாக நிராகரித்துள்ளது கம்போடியா

கம்போடியா மீதான அமெரிக்க வெளியுறவுத் துறையின் 2022 மனித உரிமைகள் அறிக்கை முற்றிலும் ஆதாரமற்றது, பக்கச்சார்பானது மற்றும் அதன் அரசியல் தன்மையில் பாரபட்சமானது என்று கம்போடியா தெரிவித்துள்ளது. கம்போடியா உட்பட பிற நாடுகளில் அமெரிக்க வெளியுறவுத்துறையின் வருடாந்திர மனித உரிமைகள் அறிக்கைகள், அதன் நடைமுறையில் இரட்டைத் தரத்தை அப்பட்டமாக அம்பலப்படுத்துகிறது என  கம்போடிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இருநூறு ஆண்டுகளுக்கும் மேலான ஜனநாயகத்தின் சொந்த பதிப்பைக் கொண்ட அமெரிக்கா இன்னும் தினசரி அடிப்படையில் மனித […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் பல் துலக்கும் பிரஷ் கொண்டு சுவற்றில் துளையிட்டு தப்பிய கும்பல்!

அமெரிக்காவில் சிறையின் சுவரை பல் துலக்கும் பிரஷ் கொண்டு துளையிட்டு இரு சிறைவாசிகள் தப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியான விர்ஜினியாவில் உள்ள ஜெயிலில் இருந்து இரு கைதிகள் தப்பித்துவிட்டதாக நியூபோர்ட் ஷெரிப் அலுவலகம் அபாய எச்சரிக்கை அளித்தது. இதனால், சிறைக்காவலர்கள் அந்த கைதிகள் இருந்த அறையை சென்று பார்த்துள்ளனர். அங்குள்ள சுவற்றில் ஒரு நபர் வெளியே செல்லும் அளவில் மிகப்பெரிய துளை ஒன்று ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதன் வழியாக கார்சா மற்றும் நெமோ என்ற […]

செய்தி வட அமெரிக்கா

கனடா முழுவதும் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

2021 ஆம் ஆண்டு ரிச்மண்ட் ஹில்லில் எல்னாஸ் ஹஜ்தாமிரி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக தேடப்பட்டு வந்த இருவருக்கு கனடா முழுவதும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 20, 2021 அன்று யோங்கே ஸ்ட்ரீட் மற்றும் பான்ட்ரி அவென்யூ பகுதியில் உள்ள கிங் வில்லியம் கிரசண்டில் உள்ள நிலத்தடி பார்க்கிங் கேரேஜில் ஹஜ்தாமிரி தாக்கப்பட்டார். புலனாய்வாளர்கள் கூறும்போது, அவரது முன்னாள் காதலன் என்று கூறப்படும் ஒரு ஆண் குழுவால் அவர் வாணலியால் தாக்கப்பட்டார். தாக்குதல் நடத்தியதற்காக ரியாசத் சிங் […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் மூவரின் உயிரை பறித்த கண் சொட்டு மருந்து

அசுத்தமான கண் சொட்டு மருந்துகளினால் ஏற்படும் இறப்புகள் மற்றும் குருட்டுத்தன்மை அமெரிக்க  முழுவதும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று அமெரிக்கர்கள் இறந்துள்ளனர், எட்டு பேர் பார்வை இழப்பிற்கு ஆளாகியுள்ளனர் மற்றும் சூடோமோனாஸ் ஏருகினோசா எனப்படும் அரிய மருந்து-எதிர்ப்பு பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட நான்கு பேர் தங்கள் கண் இமைகளை அகற்ற வேண்டியிருந்தது. இந்திய உற்பத்தியாளர் குளோபல் பார்மாவின் EzriCare மற்றும் Delsam Pharma கண் சொட்டு மருந்துகளில் பாக்டீரியா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, சுகாதார அதிகாரிகள் ஆய்வு செய்யும் போது அவை […]

செய்தி வட அமெரிக்கா

பிரபல வானொளி தொகுப்பாளர் சடலமாக மீட்பு

வானொலி தொகுப்பாளர் ஜெஃப்ரி வாண்டர்கிரிஃப்ட் காணாமல் போன ஒரு மாதத்திற்கு பின்னர் சான் பிரான்சிஸ்கோ விரிகுடாவின் நீரில் மிதப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். JV என அழைக்கப்படும்  வானொலி தொகுப்பாளர் பிப்ரவரி 23 அன்று சான் பிரான்சிஸ்கோ காவல் துறையிடம் காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டது. புதன் கிழமை மாலை 5 மணிக்கு முன்னதாகவே அவரது உடலைக் கண்டுபிடித்ததாக பொலிஸார் உறுதிசெய்தனர். இந்நிலையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

செய்தி வட அமெரிக்கா

கலிபோர்னியாவை புரட்டி போட்ட சூறாவளி மற்றும் கனமழை; 3.5 கோடி பேர் பாதிப்பு!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 3.5 கோடிக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், சூறாவளி காற்று மற்றும் கனமழையால் நேற்றும், இன்றும் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். சூறாவளியின் பலத்த காற்றின் வேகத்தில் மரங்கள் வேருடன் சாய்ந்து விழுந்தன. மின் இணைப்புகளும் பரவலாக சேதமடைந்தன. கனமழையால் 3.5 கோடி பேர் பாதிக்கப்பட்டதுடன், 1.2 லட்சம் வீடுகளுக்கான மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டு உள்ளது. சான் பிரான்சிஸ்கோ நகரில் மரம் விழுந்ததில், 5 பேர் காயம் அடைந்து உள்ளனர். சான் பிரான்சிஸ்கோ […]

error: Content is protected !!