ஐரோப்பா செய்தி

ஒரு வருடத்திற்கும் பேலாக சிறுநீர் கழிக்க முடியாமல் அவதி: லண்டன் இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட அரிய நிலை

  • April 15, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் ஒரு வருடத்திற்கும் மேலாக சிறுநீர் கழிக்க முடியாத ஒரு பெண்ணுக்கு ஒரு அரிய நிலை கண்டறியப்பட்டுள்ளது, இது தனது வாழ்க்கையை முற்றிலும் மாற்றியது என்று அவர் கூறுகிறார். லண்டனைச் சேர்ந்த 30 வயதான எல்லே ஆடம்ஸ் என்ற இளம் பெண் தனது வாழ்க்கையை மாற்றிய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அக்டோபர் 2020ல், தன்னால் சிறுநீர் கழிக்க முடியவில்லை என்பதை எல் உணர்ந்தார்.எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் அல்லது சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற நினைத்தாலும் எல்லே ஆடம்ஸால் […]

செய்தி தமிழ்நாடு

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரப்பா சாமி தரிசனம் செய்தார்

  • April 15, 2023
  • 0 Comments

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரப்பா சாமி தரிசனம் செய்தார். முன்னதாக சாமி தரிசனம் செய்ய வந்த கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஈஸ்வரப்பாவை பாஜகவினர்  வரவேற்றனர். தொடர்ந்து கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஈஸ்வரப்பா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் 100% பாஜக வெற்றி பெறும். வேறு யாரும் வெற்றி பெற முடியாது. கர்நாடகத்தில் நூறு சதவீதம் மெஜாரிட்டியோடு பாஜக வெற்றி பெறும். ராகுல்காந்தி பதவி நீக்கம் தாக்கத்தை […]

ஐரோப்பா செய்தி

வாக்னர் கூலிப்படையினரில் 5000 மேற்பட்டவர்களுக்கு மன்னிப்

  • April 15, 2023
  • 0 Comments

உக்ரைனுக்கு எதிராக போராடிய 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்னர் கூலிப்படையினருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக எவ்ஜெனி பிரிகோஜன் தெரிவித்துள்ளார். வாக்னர் குழு, முதலில் ரஷ்ய ஆயுதப் படைகளில் படை வீரர்களால் பணியமர்த்தப்பட்டது. கடந்த ஆண்டு ரஷ்ய இராணுவம் மிகப் பெரிய அளவில் தோல்விகளை சந்தித்தப் பின்னர் உக்ரைன் போரில் முக்கிய பங்கு வகித்தது. தற்போது வாக்னர் கூலிப்படையினருடனான ஒப்பந்தங்கள் நிறைவுப் பெற்றுள்ளன. இதனையடுத்து 5000 மேற்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதகா கூறப்படுகிறது.

செய்தி தமிழ்நாடு

ஸ்ரீ சொர்ண வராஹி அம்மன் கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது

  • April 15, 2023
  • 0 Comments

செங்கம் ஒன்றியம் பக்கிரிபாளையம் ஊராட்சி காமாட்சி நகரில் ஸ்ரீ சொர்ண  வராஹி அம்மன் கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியம் பக்கிரி பாளையம் ஊராட்சி காமாட்சி அம்மன் நகரில் புதியதாக எழுந்தருளியுள்ள ஸ்ரீ சொர்ண வராஹி அம்மன் கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா இன்று வராஹி சித்தர்.ஸ்ரீ ல ஸ்ரீ பஞ்சாட்சரம்  அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மேலும் கோயிலின் மேல் உள்ள கலசத்திற்கு புனித நீரால் […]

ஐரோப்பா செய்தி

உக்ரைனுக்கு எதிரான போரில் இணையும் 4 லட்சம் ரஷ்ய வீரர்கள்!

  • April 15, 2023
  • 0 Comments

உக்ரைனில் ரஷ்யா நடத்திவரும் போரில் மேலும் 4,00,000 ரஷ்ய வீரர்கள் விரைவில் சேரலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஒரு நீண்ட சண்டையாக தொடர்ந்துவரும் உக்ரைனிய போரில், ரஷ்யா இந்த ஆண்டு புதிதாக 4,00,000 ஒப்பந்தப் படைவீரர்களை நிரப்பிக்கொள்ள முயன்றுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யா இந்த வசந்த காலத்தில் உக்ரைனில் மேலும் தாக்குதலுக்கான திட்டங்களைத் திரும்பப் பெற்றுள்ளது. மேலும் அதிக இடத்தைப் பெறத் தவறிய நிலையில், விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் உக்ரேனிய படைகளின் புதிய எதிர்தாக்குதலை மழுங்கடிப்பதில் […]

ஐரோப்பா செய்தி

உக்ரைனுக்கு வெடிமருந்துகளை வழங்கும் போலந்து!

  • April 15, 2023
  • 0 Comments

உக்ரைனுக்கு உதவும் வகையில் வெடிமருந்து உற்பத்தியை அதிகரிக்க போலந்து தீர்மானித்துள்ளது. இது குறித்த அறிவிப்பை அந்நாட்டின் பிரதமர் இன்று அறிவித்துள்ளார். இதேபோல் நோர்வேயும் உக்ரைனுக்கு வெடிமருந்துகளை வழங்கவுள்ளதாக ஐரோப்பிய பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பா செய்தி

கெர்சனின் ஒப்லாஸ்ட் பகுதி மீது 301 குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய ரஷ்யா!

  • April 15, 2023
  • 0 Comments

கெர்சனின் ஒப்லாஸ்ட் பகுதி மீது ரஷ்யா 301 குண்டுகளை வீசி தாக்குதல்களை மேற்கொண்டதாக உக்ரைன் அறிவித்துள்ளது. இதன்படி கடந்த 24 மணி நேரத்தில், தெற்கு கெர்சன் பகுதியை நோக்கி 67 முறை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனரக பீரங்கி, மற்றும் கிராட் மல்டிபிள் ரொக்கெட் லாஞ்சர்களில் இருந்து 301 குண்டுகள் வீசப்பட்டதாக சுறப்படுகிறது. கெர்சனில் மாத்திரம் ஏழு முறை செல் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், குடியிருப்பு கட்டங்களை நோக்கி 23 குண்டுகள் வீசப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக உக்ரைன் அதிகாரிகள் […]

செய்தி தமிழ்நாடு

ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்தப்பட்டது குறித்து கவிஞர் வைரமுத்து பேட்டி

  • April 15, 2023
  • 0 Comments

எதிரியை களமாட விட வேண்டும். எதிரியின் வாள் பறிக்கப்பட கூடாது, களம் மறுக்கப்பட கூடாது: ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்தப்பட்டது குறித்து  கவிஞர் வைரமுத்து பேட்டி வைகை இலக்கிய திருவிழாவின் இரண்டாம் நாளில் கவிப்பேரரசு வைரமுத்து பங்கேற்று உரை கல்லூரி மாணவர், ஆசிரியர்கள்  நிகழ்த்தினார். பின் செய்தியாளர்களிம் பேசிய அவர் ராகுல்காந்தியின் பதவி பறிப்பில் எனக்கு உடன்பாடு இல்லை. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு ஒரே ஒரு கருத்தை மட்டும் சொல்கிறேன். எதிரியை களமாட விட வேண்டும். எதிரியின் […]

ஐரோப்பா செய்தி

சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்ட பனைமரங்களால் சுவிஸில் ஏற்பட்டுள்ள பிரச்சினை

  • April 15, 2023
  • 0 Comments

சுவிட்சர்லாந்துக்கு சீனாவிலிருந்து ஒருவகை பனை மரங்கள் 1830களில் கொண்டு வரப்பட்டன.தற்போது அவற்றால் சில பிரச்சினைகள் உருவாகியுள்ளன. Ticino மாகாணத்தில் பெருமளவில் பரவியுள்ள அந்த பனை மரங்கள் தற்போது பெரும் பிரச்சினையாகியுள்ளன.அதாவது, இந்த பனை மரங்கள் வளரும் இடங்களைச் சுற்றி சுவிட்சர்லாந்தில் பொதுவாக காணப்படும் எந்த தாவரங்களும் முளைப்பதில்லை. அத்துடன், பனை மரங்களிலிருந்து விழும் காய்ந்த இலைகளால் தீப்பிடிக்கும் அபாயமும் காணப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தை ஏற்படுத்தி, தீப்பிடிக்கும் அபாயத்தையும் உருவாக்கியுள்ளதால், தற்போது இந்த பனை மரங்களை வெட்டி அகற்ற […]

ஐரோப்பா செய்தி

உணவுப்பொருள் தொடர்பில் பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ஒரு அவசர எச்சரிக்கை!

  • April 15, 2023
  • 0 Comments

நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்ட சீஸ் சேர்க்கப்பட்ட உணவை உண்ட ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பிரித்தானியர்களுக்கு சீஸ் தொடர்பில் ஒரு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சீஸை உட்கொண்டவர்களுக்கு லிஸ்டீரியாசிஸ் என்னும் நோய் பரவுவது தெரியவந்துள்ளது. இந்த நோய்த்தொற்று காரணமாக ஒருவர் பலியாகியுள்ளதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட சீஸை வாங்கியவர்கள் அதை உண்ணவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வயதான தங்கள் உறவினர்கள், கர்ப்பிணிகள் யாராவது அந்த சீஸை வாங்கியுள்ளார்களா என்பதை கவனித்துக்கொள்ளுமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.   Baronet எனப்படும் ஒரு […]

error: Content is protected !!