எரிவாயு விலைகள் அதிகரிக்கப்படும் சாத்தியம்!

விலை சூத்திரத்தின் பிரகாரம் நாளை (04.09) நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயுவின் விலை திருத்தம் மேற்கொள்ளப்படும் என அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதன்படி இம்முறை மேற்கொள்ளப்படும் விலைத் திருத்தத்தில் கணிசமான அதிகரிப்பை எதிர்பார்க்க முடியும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பை கருத்திற்கொண்டு இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை தற்போது 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் 2,982 ரூபாய்க்கும், 05 கிலோ எரிவாயு சிலிண்டர் 1,198 ரூபாய்க்கும், 2.3 கிலோ எரிவாயு சிலிண்டர் 561 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 8 times, 1 visits today)