இலங்கை

சீன கப்பலைத் தொடர்ந்து மற்றுமொரு நாட்டின் போர் கப்பலும் இலங்கை துறைமுகத்தில்!

தென்கொரிய கடற்படைக்கு சொந்தமான ‘குவாங்கெட்டோ தி கிரேட்’ என்ற போர்க்கப்பல் இன்று (26.10) காலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான கொரிய தூதுவர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தென் கொரிய போர்க்கப்பல் ஒன்று 2017 அக்டோபரில் இலங்கைக்கு வந்துச் சென்றது. இதன்பின்னர் தற்போதுதான் இலங்கைக்கு வருகைதந்துள்ளது.

இந்தோ-பசிபிக் மூலோபாயத்தின் கீழ் தெற்காசிய பங்குதாரர்களுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் இலங்கைக்கு விஜயம் செய்வதாக தென் கொரிய கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த கப்பல் கொரிய கடற்படையின் கடற்கொள்ளை எதிர்ப்பு பிரிவுக்கு சொந்தமானது, இது கூட்டு பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் கொரிய மற்றும் பிற கப்பல்களின் பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதேவேளை சீனாவின் ஆய்வுக் கப்பலான சீயான 06 இலங்கையில் தரித்து நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!