ஐரோப்பா

துருக்கியில் ஸ்கை ரிசார்ட்டில் தீ விபத்து : இருவர் பலி, சிலருக்கு மூச்சுத்திணறல்!

துருக்கியில் ஒரு ஸ்கை ரிசார்ட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் சிக்கிக்கிக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

துருக்கியின் வடமேற்குப் பகுதியில் உள்ள பர்சா மாகாணத்தின் உலுடாக்கில் மூடப்பட்ட கெர்வன்சராய் ஹோட்டலில் இந்த தீவிபத்து இடம்பெற்றுள்ளது. இது அவ் ஹோட்டலில் பதிவான இரண்டாவது தீ விபத்து சம்பவமாகும்.

தீயணைப்பு வீரர்கள் விரைவாக சம்பவ இடத்திற்கு வருகை தந்ததாகவும், இரண்டு மணி நேர கடுமையான போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும்  அவர்களால் முழு கட்டிடத்தையும் காப்பாற்ற முடியவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளதுடன், தீ விபத்துக்கான காரதண்தை அறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 33 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்