மத்திய கிழக்கு

காஸாவில் வாட்டி வதைக்கும் வெப்பம் – மக்களுக்கு காத்திருக்கும் அடுத்த ஆபத்து

காஸாவில் தீவிரமடையும் போருக்கு மத்தியில் வெப்பநிலை உயரத் தொடங்கியுள்ளதால் நோய்ப் பரவலுக்கான அச்சுறுத்தலும் அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது.

பாலஸ்தீன அகதிகளுக்கான நிவாரண அமைப்பு இதனை தெரிவித்துள்ளது.

நோய், நோய்ப்பரவல் ஆகியவை குறித்த அச்சம் நிலவுவதாக அமைப்பின் இயக்குநர் ஸ்கோட் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து நெரிசலினால் அனைத்துப் பணிகளும் மெதுவடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உணவு, நீர், இப்போது நிழல் என்று மக்கள் தேடலில் மூழ்கியிருப்பதை அவர் சுட்டினார். கொசுக்களைக் கட்டுப்படுத்தவும் இடங்களைத் தூய்மைப்படுத்தவும் வேலைகள் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

நீர், சுகாதாரம் போன்ற செயல்முறைகளை ஒட்டுமொத்தமாக மேம்படுத்தும் முயற்சிகளும் தொடரவேண்டும் என்று திரு. ஆண்டர்சன் சொன்னார்.

(Visited 23 times, 1 visits today)

SR

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.