தாய்லாந்தில் இருந்து பெருந்தொகை போதைப்பொருளைக் கடத்திய பிரித்தானிய மொடல் அழகிக்கு சிறை!

ஸ்பெயினுக்குள் கிட்டத்தட்ட £200,000 மதிப்புள்ள போதைப்பொருட்களை கடத்த முயன்ற பிரித்தானிய மொடல் அழகி ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டிங்ஹாம்ஷையரின் ஹூத்வைட்டைச் (Nottinghamshire, Huthwaite) சேர்ந்த கிளாரா வில்சன் என்ற பெண்ணிற்கே 03 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் இருந்து 34 கிலோவிற்கும் அதிகமான கஞ்சாவை தனது பையில் மறைத்து வைத்திருந்த நிலையில் அவர் பார்சிலோனா விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளதுடன், £750,000இற்கும் அதிகமான தொகையை அபராதமாக செலுத்த உத்தரவிட்டுள்ளனர்.
(Visited 4 times, 1 visits today)