இலங்கையில் சுற்றிவளைப்பின் போது ஆயுதங்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!
எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் இன்று (04) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஆயுதங்கள் சிலவற்றை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
விசேட பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, சந்தேகநபரிடம் இருந்து AK 47 ரக துப்பாக்கி, 2 மெகசின்கள், தோட்டாக்கள், 9 mm கைத்துப்பாக்கி மற்றும் இரண்டு வாள்கள், கத்தி ஒன்று ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
(Visited 66 times, 1 visits today)





