செய்தி விளையாட்டு

IPL Match 69 – மும்பையை வீழ்த்தி முதலிடத்தை பிடித்த பஞ்சாப்

10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று நாளையுடன் நிறைவடைய உள்ளது.

இதில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற 69வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஆடின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 57 ரன்கள் எடுத்தார்.

இதனையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரியன்ஷ் ஆர்யா – பிரம்சிம்ரன் சிங் களமிறங்கினர்.

பஞ்சாப் அணிக்கு வெற்றியை உறுதி செய்த ஆர்யா 62 ரன்களிலும், ஜோஷ் இங்கிலிஸ் 73 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருவரின் விக்கெட்டையும் சாண்ட்னர் கைப்பற்றினார்.

இறுதி கட்டத்தில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த பஞ்சாப் கிங்ஸ் 187 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. ஐயர் 26 ரன்களுடனும், வதேரா 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

(Visited 3 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி