இலங்கை

இலங்கையில் அரசுக்கு சொந்தமான இல்லங்களை வழங்காமல் தாமதப்படுத்தும் அரசியல்வாதிகள்

இலங்கையில் அரசுக்கு சொந்தமான இல்லங்களைக் கையளிக்குமாறு முன்னாள் அமைச்சர்கள் சிலருக்கு மீண்டும் நினைவுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொது நிர்வாக அமைச்சு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

கடந்த அரசாங்கத்தின் 31 அமைச்சர்களுக்கு அரச இல்லங்கள் வழங்கப்பட்டிருந்தன.

அவர்களில் 13 பேர் மாத்திரமே இதுவரையில் அரச இல்லங்களை மீளக் கையளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் வீடுகளை மீளக் கையளிக்கும் போது அவற்றின் மின்சார மற்றும் நீர் கட்டணங்கள் முழுமையாகச் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அரச இல்லங்களைக் கையளிப்பதற்குத் தவறும் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, விடயத்துடன் தொடர்புடைய அமைச்சரான பிரதமர் ஹரினி அமரசூரிய வழங்கிய ஆலோசனைகளுக்கு அமைய இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.

(Visited 4 times, 4 visits today)
See also  இலங்கை காலநிலை தொடர்பில் வளிமண்டல திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content