ஈரானில் போராட்டங்களுக்குப் பின் தெஹ்ரானில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு – வான்வெளி மீண்டும் திறப்பு
எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்ற நிச்சயமற்ற நிலை அதிகரித்துள்ளதால், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த ஈரானின் வான்வெளி தற்போது மீண்டும் விமான போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக நடைபெற்ற போராட்டங்களும் பெரும்பாலும் தணிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போராட்டங்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஈரான் அதிகாரப்பூர்வமாக எந்த எண்ணிக்கையும் வெளியிடவில்லை.
எனினும், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், 1,000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
அரசு எதிர்ப்பு போராட்டக்காரர்களை தூக்கிலிட தெஹ்ரான் திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல்களை ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி மறுத்துள்ளார்.
போராட்டக்காரர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதையடுத்து, இந்த மறுப்பு வெளியானது.





