சுகாதார அமைச்சராக மீண்டும் ராஜிதவை நியமிக்க வாய்ப்பு!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மீண்டும் சுகாதார அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இது குறித்த கலந்துரையாடல், சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மத்தியில் இடம்பெற்றுள்ளதாகவும் அறிய முடிகிறது.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதார சீரழிவுகளை கருத்தில்கொண்டு, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கட்சிகள் கொண்டுவரவுள்ளதாக கலந்துரையாடல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே கலந்துரையாடி வருகின்றனர்.
(Visited 8 times, 1 visits today)