ஆசியா

ஹிஜாப் அணியாத பெண் ஊழியர்கள் ;ஈரானில் மூடப்பட்ட பிரபல நிறுவனம்!

ஈரானில் ஹிஜாப் அணியாத பெண் ஊழியர்களின் புகைப்படங்களை பதிவிட்ட டிஜிகாலா ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தை மூட ஈரான் அரசாங்கம் உத்தரவிட்டது.

இஸ்லாமிய நாடான ஈரானில் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், இதனை கண்காணிக்க தனி பொலிஸ் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

ஈரானின் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியதால், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் அமேசான் போன்ற நிறுவனங்களுடன் ஈரான் மக்களுக்கு பெரியளவில் தொடர்பில்லை.இதன் காரணமாக , ஈரானின் அமேசான் என்று அறியப்பட்ட டிஜிகாலா ஆன்லைன் வர்த்தக நிறுவனம் அங்கு மிகவும் பிரபலமடைந்தது.

ஹிஜாப் அணியாத பெண் ஊழியர்களால் மூடப்பட்ட பிரபல நிறுவனம்! - கனடாமிரர்

இந்நிறுவனம் மாதம் ஒன்றுக்கு 4 கோடிக்கும் கூடுதலான வாடிக்கையாளர்களின் தேவையையும், 3 லட்சத்துக்கும் அதிகமான வர்த்தகர்களையும் கொண்டுள்ளது.இந்நிலையில், டிஜிகாலா ஆன்லைன் வர்த்தக நிறுவனம், அதன் அலுவலக நிகழ்ச்சியொன்றில் எடுக்கப்பட்ட, ஹிஜாப் இல்லாமல் பெண் ஊழியர்கள் இருக்கும் புகைப்படங்களை அதன் இணையதளத்தில் வெளியிட்டது.

இதையடுத்து, நிறுவனம் அரசின் விதிகளை மீறியதாக கூறி உடனடியாக மூடும்படி ஈரான் அரசாங்கம் உத்தரவிட்டது. மேலும், டிஜிகாலா நிறுவனத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

(Visited 10 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content