ஆசியா

சிங்கப்பூரில் நண்பரை காப்பாற்ற முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி

சிங்கப்பூரில் – செந்தோசா தீவில் காணாமல் போன ஒருவரை தேடும் பணி நடைபெற்று வந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தன்னுடைய சக நண்பரான படகோட்டியை காப்பாற்ற முயன்றபோது காணாமல் போன அந்த பெண் படகோட்டி கடலில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதனை தேடுதல் நடவடிக்கையில் உதவிய சிம் செர் ஹூய் என்பவர் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் காலை 10.25 மணியளவில் செந்தோசா தீவின் கடற்கரையில் காணாமல் போன கயாக் படகோட்டி குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் செந்தோசாவின் தெற்கு முனையில் கயாக் நபர் படகு கவிழ்ந்தது.

பின்னர் அவரை காப்பாற்ற சென்ற பெண்ணும் கடலில் கவிழ்ந்ததாக அவர் கூறினார். இருவரும் அடித்துச்செல்லப்பட்ட நிலையில், நபர் மட்டும் ஒரு படகு மூலம் மீட்கப்பட்டார்.

காணாமல் போன பெண்ணை தேடும் பணி நடந்து வருகிறது என்று கடல் மற்றும் துறைமுக ஆணையம் தனது சமீபத்திய புதுப்பிப்பில் தெரிவித்துள்ளது.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!