இலங்கை

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி – அனுரவை பாராட்டிய சுமந்திரன்

ஜனாதிபதித் தேர்தலில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்ற அனுரகுமார திஸாநாயக்கவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அனுரகுமார திஸாநாயக்க, இன அல்லது மத பேரினவாதத்தில் தங்கியிருக்காமல் வெற்றியைப் பெற்றதற்காக சுமந்திரன், பாராட்டியதுடன் இது அவரது பிரச்சாரத்தை வேறுபடுத்திய முக்கிய காரணியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இன அல்லது மதப் பேரினவாதத்தை நாடாமல் பெற்ற அபார வெற்றிக்காக அனுர திஸாநாயக்கவுக்கு வாழ்த்துகள்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆலோசனையின் பேரில் மற்றவர்களை நிராகரித்து சஜித் பிரேமதாஸவிற்கு வாக்களித்த வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கும் தேர்தல் வரைபடத்தில் வித்தியாசத்தை காட்டியவர்களுக்கும் எமது நன்றிகள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 61 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்