இலங்கை செய்தி

புதிய மருந்துகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை

இலங்கை அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனம் தனது உற்பத்தித் திறனை அதிகரித்து, இந்த ஆண்டில் பாரிய இலக்குகளை அடைவதற்குத் திட்டமிட்டுள்ளது.

இந்த ஆண்டு 10 புதிய மருந்து தயாரிப்புகளைச் சந்தைக்கு அறிமுகப்படுத்த உள்ளதாக கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் 3,625 மில்லியன் மாத்திரைகளை உற்பத்தி செய்து சாதனை படைத்திருந்த நிலையில், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கையை 4,000 மில்லியனாக உயர்த்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது 70 வகையான மருந்துகளை உற்பத்தி செய்து வரும் இக்கூட்டுத்தாபனம், கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் 5 புதிய மருந்துகளை அறிமுகப்படுத்தியிருந்தது.

அதேவேளை, கடந்த 2025 ஆம் ஆண்டில் 27.06 பில்லியன் ரூபாயை மொத்த வருமானமாக ஈட்டியுள்ளதாக அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Puvan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!