இலங்கை

பிரித்தானியாவில் சாரா கொலை வழக்கு: பொலிஸார் தேடலில் சிக்கிய சகோதரர்கள்

பிரித்தானியாவில் பாகிஸ்தான் வம்சாவளியினரான சிறுமி ஒருத்தி சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், பொலிஸார் தொடர்ந்து அவளது தந்தை, சித்தி மற்றும் தந்தையின் தம்பி ஆகியோரை வலை வீசித் தேடிவருகின்றனர்.

ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி, இங்கிலாந்திலுள்ள Woking என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாள் சாரா (10), என்னும் சிறுமி.சாராவின் உடல் கண்டெடுக்கப்படுவதற்கு முந்தைய தினம், சாராவின் தந்தையான ஷெரீஃப் (41) அவரது இரண்டாவது மனைவியான பட்டூல் (29) மற்றும் ஷெரீஃபின் சகோதரரான மாலிக் (28) ஆகியோர், ஷெரீஃபின் ஐந்து பிள்ளைகளுடன் பாகிஸ்தானுக்குத் தப்பிச் சென்றுவிட்டார்கள். அவர்களை பிரித்தானியா மற்றும் பாகிஸ்தான் பொலிஸார் தேடி வருகிறார்கள்.

பிரித்தானியாவில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட குழந்தை வழக்கு: பொலிசார் தேடலில் சிக்கியது யார் தெரியுமா? | Sara Sharif Issue Uk

பொலிஸார், ஷெரீஃப், பட்டூல் மற்றும் ஷெரீஃபின் சகோதரரான மாலிக் ஆகியோரை வலை வீசித் தேடிவரும் நிலையில், அவர்கள் ஷெரீஃபின் ஐந்து பிள்ளைகளைக் கண்டுபிடித்துள்ளார்கள். அந்தப் பிள்ளைகள் ஒன்று முதல் 13 வயது வரையுள்ள பிள்ளைகள் ஆவார்கள்.

பொலிஸார் தம்பதியரைத் தேடும்போது, பிள்ளைகள் வீட்டிலிருந்த ஒரு அறையில் இருந்ததைக் கண்டு அவர்களை பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றுள்ளார்கள்.பின்னர் அவர்கள் அவர்களுடைய தாத்தாவாகிய முகம்மதுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள். இதுவரை அவர்கள் தங்கள் தாத்தாவுடன் இருந்துவரும் நிலையில், இன்று, அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளார்கள்.இதற்கிடையில், ஷெரீஃப், பட்டூல் மற்றும் மாலிக் ஆகியோரை விரைவில் கண்டுபிடித்துவிடுவோம் என பொலிஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.

(Visited 5 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content