இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை தணிப்பது குறித்து அறிக்கை சமர்ப்பிப்பு!
நாட்டின் தற்போதைய மின்சார நெருக்கடியை முதன்மையாகப் பாதித்த காரணிகளைக் குறிப்பிட்டு, பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைத் தணிப்பது குறித்து துறைசார் கண்காணிப்புக் குழு அறிக்கை ஒன்றைத் தயாரித்துள்ளது.
குறித்த அறிக்கையின் ஊடாக, மின்சார நெருக்கடியை சமாளிப்பதற்கான முன்மொழிவுகள் மற்றும் அவதானிப்புகள் மேற்கொள்ளப்பட்டு, அது தொடர்பில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்துள்ள மின் கட்டணத்தை தொடர்ந்தும் கடைப்பிடிப்பதன் மூலம் நெருக்கடி மேலும் தீவிரமடைந்து வருவதை அவதானிக்க முடிந்தது.
(Visited 12 times, 1 visits today)





