இலங்கை

இலங்கையின் பலப் பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலை!

இலங்கையின் பலப்பகுதிகளில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

இதன்படி தென் மாகாணத்திலும் களுத்துறை மாவட்டத்திலும் இன்று (15.09) அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கொழும்பு, கம்பஹா, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுகளில் 40-45 கி.மீ அளவில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை  மற்றும் பலத்த மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்த்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வலிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

(Visited 9 times, 1 visits today)
See also  இலங்கை பொதுத் தேர்தல் : யானை சின்னத்தில் களமிறங்கும் ரணிலின் குழுவினர்?
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content