இலங்கை

பொதுஜன பெரமுனவிற்கு புதிய தலைமைத்துவத்தை உருவாக்க திட்டம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன புதிய அரசியல் கூட்டமைப்பை உருவாக்குவது மற்றும் பொருத்தமான தலைமைத்துவத்தை நியமிப்பது குறித்து டிசம்பர் மாத நடுப்பகுதிக்குள் தீர்மானிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொதுஜன பெரமுனவின் இரண்டாவது பொது மாநாட்டை டிசம்பரில் நடத்தவும் அதற்கு முன்னதாக இந்த புதிய கூட்டணியின் தலைமையை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு தேர்தல் ஆண்டு என்பதால் அது தொடர்பான பல முக்கிய முடிவுகள் இந்த மாநாட்டில் எடுக்கப்பட உள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பொதுஜன பெரமுனவின் சிறந்த தலைவராக நியமிப்பது தொடர்பில் கட்சியின் சிரேஷ்டர்கள் மத்தியில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்