ஆசியா இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

துருக்கியுடனான 40 ஆண்டுகால மோதலை முடிவிற்கு கொண்டுவந்த குர்திஸ்தான் கட்சி

குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (PKK), துர்க்கியுடன் போர்நிறுத்தத்தை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளது.

PKK சார்பு செய்தி நிறுவனம் (ANF) வெளியிட்ட சட்டவிரோதக் குழுவின் அறிக்கை, துருக்கிய அரசுடன் 40 ஆண்டுகால மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு முக்கிய படியாகக் கருதப்படுகிறது.

“PKK தலைவர் ஓகலனின் அமைதி மற்றும் ஜனநாயக சமுதாயத்திற்கான அழைப்பை செயல்படுத்துவதற்கு வழி வகுக்கும் வகையில், இன்று முதல் போர்நிறுத்தம் அமலுக்கு வருவதாக நாங்கள் அறிவிக்கிறோம்,” என்று PKK நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது.

“அழைப்பின் உள்ளடக்கத்தை அப்படியே நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம், மேலும் அதைப் பின்பற்றி செயல்படுத்துவோம் என்று நாங்கள் கூறுகிறோம்,” என்று குழு தெரிவித்துள்ளது.

“தாக்குதல் நடத்தப்படாவிட்டால் எங்கள் படைகள் எதுவும் ஆயுதமேந்திய நடவடிக்கை எடுக்காது” என்று மேலும் தெரிவித்துள்ளது.

(Visited 15 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!