செய்தி

அவசரமாக மும்பை திரும்பிய கோலி.. டெஸ்ட் தொடரில் ருதுராஜ் விலகல்

இந்திய அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடருக்கு பிறகு இரு அணிகளும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளன. டி20 தொடர் சமனில் முடிந்தது. அடுத்து விளையாடிய ஒருநாள் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் டிசம்பர் 26-ம் தேதி தொடங்குகிறது.

எனினும், இதற்கு முன் இந்திய ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார் எனவும் அதே நேரத்தில் தென்னாப்பிரிக்காவில் இருந்து விராட் கோலி திடீரென மும்பை திரும்பியுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை திரும்பிய விராட்:

விராட்கோலி தற்போது பிரிட்டோரியாவில் நடைபெற்று வரும் மூன்று நாள் கொண்ட பயிற்சி போட்டியில் பங்கேற்கவில்லை எனவும் விராட் தனிப்பட்ட குடும்ப காரணங்களுக்காக அவசரமாக தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை வந்துள்ளதாக கூறப்படுகிறது. டிசம்பர் 26 ஆம் தேதி செஞ்சூரியனில் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன் கோலி தென்னாப்பிரிக்கா திரும்புவார் என்றும் அணி நிர்வாகம் மற்றும் பிசிசிஐயிடம் அனுமதி பெற்று மும்பை சென்றதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், இது குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் அறிவிக்கவில்லை. கோலி டெஸ்ட் தொடருக்கு திரும்பவில்லை என்றால் அது இந்திய அணிக்கு பெரும் அடியாக அமையும் என கூறப்படுகிறது.

ருதுராஜ் விரலில் காயம்:

இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் டிசம்பர் 19 அன்று போர்ட் எலிசபெத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் பீல்டிங் செய்யும் போது காயம் அடைந்த அவர், அதிலிருந்து முழுமையாக மீள முடியவில்லை என கூறி 3-வது ஒருநாள் போட்டியில் கூட ருதுராஜ் விளையாடவில்லை, அவர் மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருப்பதாக பிசிசிஐ கூறியிருந்தது. இதற்கிடையில் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் முன் ருதுராஜ் குணமடைய வாய்ப்பில்லை எனவும் இதனால் பிசிசிஐயுடன் பேசி அவரை உடனடியாக விடுவிக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

பயிற்சி ஆட்டத்தில் சிறப்பான ஆட்டம்:

பயிற்சி போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா, வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, பிரசித் கிருஷ்ணா மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தங்கள் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

(Visited 21 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
Skip to content