இலங்கையில் முதல் முறையாக இடம்பெறும் ஜல்லிக்கட்டு போட்டி!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஜல்லி கட்டு போட்டிகள் இன்று (06.01) ஆரம்பமாகியுள்ளன.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதியில் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன.
இதில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த சிறப்பு
அழைப்பாளர்கள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீறி பாயும் காளைகளை அடக்க களம் காணும் வீரர்களின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
(Visited 13 times, 1 visits today)