ஐரோப்பா

அமெரிக்காவின் வரி அச்சுறுத்தல்கள் மத்தியில் இந்தியா- இங்கிலாந்து இடையே மீண்டும் சுதந்திர வர்த்தக பேச்சுவார்த்தை

இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்க இருக்கிறது.இந்தப் பேச்சுவார்த்தை இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் திங்கட்கிழமை (பிப்ரவரி 24) நடைபெற இருக்கிறது.

இதில் இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலும் பிரட்டிஷ் வர்த்தக, தொழில் அமைச்சர் ஜோனதன் ரெனோல்ட்சும் சந்தித்துப் பேச இருக்கின்றனர்.இந்தத் தகவலைப் பிரிட்டிஷ் அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 23) வெளியிட்டது.

“உலகிலேயே மூன்றாவது ஆகப் பெரிய பொருளியலாக இந்தியா கூடிய விரைவில் தடம் பதிக்க இருக்கிறது. அந்நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது முக்கியம். இதற்குப் பிரிட்டிஷ் அரசாங்கமும் நானும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறோம்,” என்று ரெனோல்ட்ஸ் தெரிவித்தார்.

இதற்தாகவே இந்தியாவுக்குத் தமது பேச்சுவார்த்தைக் குழுவுடன் பயணம் மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார்.

இந்தியாவுடனான வர்த்தகம் தொடர்பாகப் பிரிட்டன் கடப்பாடு கொண்டுள்ளது என்பதைக் காட்ட இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறினார்.

உலகிலேயே ஆகப் பெரிய பொருளியல் பட்டியலில் தற்போது இந்தியா ஐந்தாவது இடத்திலும் பிரிட்டன் ஆறாவது இடத்திலும் உள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தின் மதிப்பு 41 பில்லியன் பவுண்டு (S$69 பில்லியன்) என்று பிரிட்டிஷ் அரசாங்கம் தெரிவித்தது.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!