ஆஸ்திரேலியா

வாழ்க்கைத் தரத்தில் திருப்தியுடன் வாழும் சிட்னி குடியிருப்பாளர்கள்!

  • May 1, 2023
  • 0 Comments

உலகின் மற்ற முக்கிய நகரங்களுடன் ஒப்பிடுகையில், சிட்னி குடியிருப்பாளர்கள் வாழ்க்கைத் தரத்தில் அதிக திருப்தியுடன் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 1000 பேரை பயன்படுத்தி இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 83 சதவீதம் பேர் வாழ்க்கை நிலைமையில் திருப்தி அடைவதாக கூறியுள்ளனர். நியூயார்க் – லண்டன், ரொறன்ரோ போன்ற நகரங்களுடன் ஒப்பிடுகையில் இது அதிக மதிப்பு என்பது சிறப்பம்சமாகும். எவ்வாறாயினும், 85 வீதமானோர் வாழ்க்கைச் செலவு குறித்து கவலையடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கை

தீவிர பாதுகாப்பில் கொழும்பு – 3500 பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில்

  • May 1, 2023
  • 0 Comments

இலங்கையில் பல பகுதிகளிலும் இன்று மே தின ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மே தினக் கூட்டங்களை முன்னிட்டு பொலிஸ் தலைமையகத்தினால் கொழும்பு , கண்டி, நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பெருமளவான கூட்டங்கள் கொழும்பில் இடம்பெறவுள்ளமையால் அங்கு 3500 பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் , கொழும்பு நகர் , […]

ஐரோப்பா

ஜெர்மனியில் வாழும் இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

  • May 1, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் 23 மில்லியன் வெளிநாட்டவர்கள் வாழ்வதாக புள்ளி விபரம் வெளியாகியுள்ளது. ஜெர்மனிய நாட்டில் மக்கள் சனத்தொகையானது 83 மில்லியன் ஆகும். அதாவது இந்த 83 மில்லியன் சனத்தொகையின் 25 சதவீதமானவர்கள் அதாவது 23 மில்லியன் மக்கள் வெளிநாட்டை பூர்வீகமாக கொண்டவர்களாக உள்ளதாக தெரியவந்திருக்கின்றது. தற்பொழுது ஜெர்மனியின் புள்ளி விபர திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளையில் 2013 ஆம் ஆண்டுக்கு பிறகு வெளிநாட்டை பூர்வீகமாக கொண்டவர்களில் 40 சதவீதமான குடியேற்றம் நடைபெற்று உள்ளதாக தெரியவந்திருக்கின்றது. இதேவேளையில் இவ்வாறு […]

விளையாட்டு

2 காற்பந்து அணி ரசிகர்களுக்கு இடையே மோதல் – இருவர் பலி 14 பேர் காயம்

  • May 1, 2023
  • 0 Comments

கொலம்பியாவின் மெடலின் (Medellin) நகரில் 2 காற்பந்து அணி ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்ததுடன் மேலும் 14 பேர் காயமுற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை (29 ஏப்ரல்) நடந்த ஆட்டத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்டிப்பென்டியென்டே டே மெடலின் (Independiente de Medellin) என்ற அணி 3-1 என அட்லட்டிக்கோ நேசியனோல் (Atletico Nacional) அணியிடம் தோற்றது. ஆட்டம் முடிந்ததும் காற்பந்து அரங்க வளாகத்தில் அந்த 2 அணி ரசிகர்களும் ஒருவரை ஒருவர் கூர்மையான […]

இலங்கை

இலங்கையில் மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா – இருவர் உயிரிழப்பு

  • May 1, 2023
  • 0 Comments

இலங்கையில் மீண்டும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து இரண்டு நாட்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். கொலன்னாவ மரண விசாரணை அதிகாரி காஞ்சனா விஜேநாயக்க இதனை தெரிவித்துள்ளார். மாத்தறை ஹமந்துவ பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதுடைய பெண்ணும், யட்டியந்தோட்டை பனாவத்தையில் வசிக்கும் 73 வயதுடைய ஆணும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த பெண் கடந்த 27ஆம் திகதி IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மறுநாள் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். மற்றைய நபர் 28ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சனிக்கிழமை உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். கொவிட் […]

இலங்கை

தாய் வெளிநாட்டில் – வவுனியாவில் 6 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்

  • May 1, 2023
  • 0 Comments

வவுனியாவில் 6 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தாய் வெளிநாட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வரும் நிலையில் தந்தை இல்லாத நிலையில் சிறுமி வாழந்து வந்துள்ளது. வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் அமைந்துள்ள முச்சக்கரவண்டி சாரதி ஒருவரின் வீட்டில் மாதாந்த கொடுப்பனவின் அடிப்படையில் குறித்த சிறுமி தங்கியிருந்துள்ளார். இந்நிலையில், காய்ச்சல் காரணமாக பூவரசன்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் அந்தரங்க உறுப்பில் இருந்து அசாதாரண இரத்தப்போக்கை அவதானித்த வைத்தியர்கள் பூவரசன்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து […]

ஐரோப்பா

பிரான்ஸில் பஞ்சுக்குள் சிக்கிய மர்மம் – சோதனையிட்டவர்கள் அதிர்ச்சி

  • May 1, 2023
  • 0 Comments

பிரான்ஸில் இதுவரை இல்லாத அளவு தடைசெய்யப்பட்ட சிகரெட் பெட்டிகளை சுங்கவரித்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இது ச்சுங்கவரித்துறையினரால் இவ்வருடத்தில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய தொகையாகும். இச்சம்பவம் தெற்கு பிரான்சின் Millau (Aveyron) நகரில் இடம்பெற்றுள்ளது. புதன்கிழமை மாலை A75 நெடுஞ்சாலையில் சுங்கவரித்துறையினர் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்துக்கிடமான பார ஊர்தி ஒன்று பயணிப்பதை பார்த்து, அதனை தடுத்து நிறுத்தினர். சாரதியிடம் விசாரணைகள் மேற்கொண்டபோது, முகக்கவச்சம் தயாரிப்பதற்குரிய பஞ்சுகளை ஏற்றிச் செல்வதாக தெரிவித்துள்ளார். அவரது பதிலில் திருத்தியடையாத சுங்கவரித்துறையினர், பார ஊர்தியின் பெட்டியை […]

செய்தி

சூடானில் இருந்து அமெரிக்கர்கள் பாதுகாப்பாக மீட்பு

  • April 30, 2023
  • 0 Comments

சூடானில் ஏற்பட்ட மோதலில் இருந்து மீட்கப்பட்ட முதல் அமெரிக்கக் குழு கிழக்கு ஆபிரிக்க துறைமுகத்தை சென்றடைந்துள்ளது. சுமார் 300 அமெரிக்கர்களை ஏற்றிச் சென்ற பேருந்துத் தொடரணியானது போர்ட் சூடானில் இருந்து சுமார் 800 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பாதுகாப்பான இடத்தை நிலத்தில் மிகுந்த ஆபத்துடன் சென்றடைந்ததாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன. சூடானில் சுமார் 16,000 அமெரிக்கர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது மற்றும் மோதலில் இருந்து மீட்கப்பட்டு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட முதல் குழு இது என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், சூடானில் […]

ஆசியா செய்தி

சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்காத நேபாள ஜனாதிபதி

  • April 30, 2023
  • 0 Comments

நேபாள அதிபர் பயணம் செய்ய முடியாது என்பதால், நடைபெற உள்ள பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவில் நேபாள வெளியுறவு அமைச்சர் நாராயண் பிரகாஷ் சவுத் பங்கேற்கிறார். ஒரு தொலைபேசி உரையாடலில், வெளியுறவு மந்திரி சவுத் நேபாளத்திலிருந்து விழாவில் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தினார். “பயணத்திற்கான தேதிகள் மே 4 முதல் மே 7 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளன” என்று சவுத் கூறினார். ஏறக்குறைய இரண்டு வார சிகிச்சைக்குப் பிறகு புதுதில்லியில் இருந்து காத்மாண்டு திரும்பவிருக்கும் ஜனாதிபதி ராம் சந்திர […]

இலங்கை செய்தி

இலங்கையில் தேடப்படும் பிரபல தாதா பிரான்சில் கைது – பொலிசார் எடுத்துள்ள நடவடிக்கை

  • April 30, 2023
  • 0 Comments

பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ள பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரராக கருதப்படும் குடு அஞ்சு தொடர்பில் சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட சந்தேக நபர் குறித்து ஏற்கனவே சட்டமா அதிபரிடம் கேட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார். போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல கொலைகளுடன் தொடர்புடைய சந்தேக நபராக கருதப்படும் குடு அஞ்சு கடந்த புதன்கிழமை பிரான்சில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். […]

error: Content is protected !!