பங்குச் சந்தையில் ஒரேயடியாக பல பில்லியன்களை இழந்த கிரெடிட் சூயிஸ் வங்கி

  • April 14, 2023
  • 0 Comments

வாடிக்கையாளர்களிடையே ஏற்பட்ட அச்சம் காரணமாக லண்டன் பங்குச் சந்தையில் பல பில்லியன்களை ஒரேயடியாக இழந்துள்ளது கிரெடிட் சூயிஸ் வங்கி. பிரித்தானியாவில் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில் FTSE 100 குறியீடானது 3.83 சதவீதம் சரிவடைந்து 7,344.45 என பதிவாகியுள்ளது.இந்த நிலையில் கிரெடிட் சூயிஸ் வங்கி பங்குகள் 30 சதவீதம் வரையில் கடும் சரிவை எதிகொண்டுள்ளது. அதாவது ஒரேயடியாக 75 பில்லியன் பவுண்டுகளை கிரெடிட் சூயிஸ் வங்கி மொத்தமாக இழந்துள்ளது. மட்டுமின்றி கிரெடிட் சூயிஸ் வங்கியின் […]

செய்தி வட அமெரிக்கா

கலிபோர்னியா பாலைவனத்தில் 55 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் தடம் புரண்டது

அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தின் பாலைவனத்தில் இரும்புத் தாது ஏற்றிச் சென்ற 55 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் நேற்று திங்கள்கிழமை தடம் புரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு இன்ஜின் இயந்திரத்தில் இருந்து சிறிய அளவிலான எரிபொருள் கசிவு இருப்பதாகவும், எனினும் பொது அல்லது சுற்றுச்சூழலுக்கு இது அச்சுறுத்தல் இல்லை என்றும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அமெரிக்காவில் அண்மையில் தொடருந்தும் இவ்வாறான விபத்துக்கள் பதிவாகிவருவதாகவும்,  இந்த மாத தொடக்கத்தில், அரிசோனாவில் கார்ன் சிரப் ஏற்றிச் சென்ற ரயில் […]

செய்தி தமிழ்நாடு

ஒருவரை ஒருவர் முட்டிக்கொண்டு தென்னங்கன்றை அள்ளி சென்றனர்

  • April 14, 2023
  • 0 Comments

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் காரை ஊராட்சியில் காஞ்சிபுரம்  தெற்கு மாவட்ட திமுக சார்பில் வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய திமுக ஏற்பாட்டில் ஒன்றிய செயலாளர் படுநெல்லி பாபு தலைமையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 70வது பிறந்த நாள் முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க விழா நடைபெற்றன. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க. சுந்தர் மற்றும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், […]

ஐரோப்பா செய்தி

ரஷ்யாவிற்கு உளவு பார்த்த ஆறுபேர் போலந்தில் தடுத்துவைப்பு!

  • April 14, 2023
  • 0 Comments

போலந்தில் இயங்கி வந்த உளவு வலையமைப்பு அந்நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக போலந்தின் பாதுகாப்பு அமைச்சர தெரிவித்துள்ளார். ஆறுபேர் கொண்ட குறித்த குழுவினர் ரஷ்யாவுக்காக உளவு பார்த்த சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குறித்த குழு நாசா வேலைகளை செய்வதற்கு திட்டமிட்டிருந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள போலந்துக்கான பாதுகாப்பு அமைச்சர் மரியஸ் பிளாஸ்க்சாக், உளவுத்துறையின் முழு உளவு வலையமைப்பும் அவிழ்க்கப்பட்டதால், உள் பாதுகாப்பு ஏஜென்சி அதிகாரிகள் மாபெரும் வெற்றியடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பா செய்தி

பக்முட் பகுதியில் 30 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் பலி : பிரித்தானிய இராணுவ ஆலோசகர் வெளியிட்ட தகவல்!

  • April 14, 2023
  • 0 Comments

கடந்த ஆண்டு மே மாதம் முதல் பாக்முட் பகுதியில் சுமார் 30 ஆயிரம் ரஷ்ய துருப்புகள் கொல்லப்பட்டுள்ளதாக பிரித்தானியாவின் மூத்த ஆலோசகர் மதிப்பிட்டுள்ளார். OSCE க்கு பிரிட்டனின் தூதுக்குழுவின் ஒரு பகுதியாக செயற்பட்டு வரும்  இயன் ஸ்டப்ஸ் குறிப்பிட்டுள்ளதாவது,  கிழக்கு உப்புச் சுரங்க நகரத்தின் கட்டுப்பாட்டைப் பெற ரஷ்யா போராடும் போது மிகவும் அதிக உயிரிழப்பு விகிதங்களைச் சந்தித்து வருவதாகக் கூறினார். கடந்த ஆண்டு மே மாதம் முதல்  பாக்முட்டைச் சுற்றியுள்ள பகுதியில் மட்டும் 20-30 ஆயிரம் […]

செய்தி தமிழ்நாடு

ஆலிமா ஹப்ஸிய்யா பட்டம் வழங்கப்பட்டது

  • April 14, 2023
  • 0 Comments

அன்னை ஹப்ஸா (ரலி)  மகளிர் அரபிக்கல்லூரியின் ஐந்தாம் ஆண்டு ஆலிமா பட்டம் வழங்கும் விழா கோவை குணியமுத்தூர் பகுதியில் உள்ள தாஜூல் இஸ்லாம் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது.. ஜமாத் தலைவர் முகம்மது இப்ராஹீம் தலைமையில் நடைபெற்ற விழாவில்,செயலாளர் அப்துல் ரஹ்மான் அனைவரையும் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக தானிஷ் அகமது தொழில்நுட்ப கல்லூரியின் இயக்குனர் அக்பர் பாஷா மற்றும் மௌலானா முகம்மது அலி,மற்றும் பேராசிரியர் அபுதாகீர் பாஜூல் பாகவி,காவல் துறை உதவி ஆணையர் சதீஷ் குமார், […]

ட்ரோன் விவகாரம் ; முட்டிமோதிக்ககொள்ளும் அமெரிக்கா மற்றும் ரஷ்யா

  • April 14, 2023
  • 0 Comments

சர்வதேச சட்டம் அனுமதிக்கும் இடங்களில் தங்கள் டிரோன் தொடர்ந்து பறக்கும் என்று ரஷ்யாவுக்கு அமெரிக்கா தெரிவித்திருந்தது. கிரீமியாவில் உள்ள கருங்கடல் பகுதியில் அமெரிக்காவின் டிரோன் ஒன்று பறந்தது. ரஷ்யா ஆக்கிரமித்து வைத்துள்ள இந்த பகுதியில் அமெரிக்காவின் டிரோன் பறந்ததால் கோபமடைந்த ரஷ்யா அதனை சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சர்வதேச ஒப்பந்தத்தை ரஷ்யா மீறி உள்ளதாக அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதர் அனடோலி அன்டோனோவிடம் அமெரிக்கா தனது கண்டனத்தை தெரிவித்தது. சர்வதேச சட்டம் அனுமதிக்கும் இடங்களில் டிரோன் தொடர்ந்து […]

ஐரோப்பா செய்தி

துருக்கியில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள மற்றுமொரு பாதிப்பு!

  • April 14, 2023
  • 0 Comments

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் தப்பியவர்கள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கூடாரங்களிலும் கொள்கலன்களிலும் வசித்துவந்த 14 பேர் வெள்ளத்தில் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் வெள்ளத்தில் சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. துருக்கியில் மே மாதம் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில் ஜனாதிபதி ரிசெப் தாயிப் எர்துவான் (Recep Tayyip Erdogan) கடும் நெருக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார். துருக்கியில் 48,000க்கும் மேற்பட்டோரும் சிரியாவில் 6,000க்கும் அதிகமானோரும் கடந்த மாதம் நிலநடுக்கத்தால் உயிரிழந்துள்ளனர். துருக்கியில் பாதிக்கப்பட்ட வட்டாரங்களை எர்துவான் நேரில் சென்று பார்வையிட்டார். […]

செய்தி தமிழ்நாடு

24 மணி நேரமும் மது பாட்டில்கள்

  • April 14, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மதுபான கடையில் காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை தான் மதுபானங்கள் விற்பனை செய்ய வேண்டும். இந்த நிலையில் மாவட்டத்தில் 24 மணி நேரமும் மதுபான கடைகளுக்கு அருகில் உள்ள டாஸ்மார்க் பாரில் மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதால் மது பிரியர்கள் மிகவும் கொண்டாட்டத்தில் உள்ளனர், ஆனால் அவர்களின் வீட்டில் உள்ள பெண்கள் திண்டாட்டத்தில் உள்ளனர் இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி பலமுறை காவல்துறைக்கு மனு அளித்தும் […]

செய்தி தமிழ்நாடு

காவல்துறை கலந்துரையாடல் கூட்டம்

  • April 14, 2023
  • 0 Comments

சென்னை புறநகர் பகுதியான  ஆவடி மாநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின் பெயரில் குற்ற செயல்களை எப்படி தடுக்க வேண்டும் பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும். பொதுமக்கள் தங்களது பகுதிகளில் காவல்துறையினர் எப்படி பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார் என்பதைப் பற்றியும் கலந்துரையாடல் காவல்துறை இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என்று காவல் ஆணையாளர் உத்தரவிட்டு உள்ள நிலையில் ஆவடி அடுத்த பட்டாபிராம் சோறாச்சேரி கிராமத்தில் பூந்தமல்லி பாம்ஸ் குடியிருப்பு பகுதியில் 500க்கும் மேற்பட்ட […]

error: Content is protected !!