இலங்கை

இலங்கை – கடவுச்சீட்டு தாமதம் மற்றும் உடனடியாக பெற்றுக்கொள்ளும் முறை தொடர்பில் நாடாளுமன்றத்தில் விளக்கம்!

கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கு ஆன்லைன் முறை மூலம் ஒரு திகதி முன்பதிவு செய்யலாம் என்றும், அந்தத் தேதியில் வந்து அதே நாளில் கடவுச்சீட்டைப் பெற முடியும் என்றும் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

உதாரணத்திற்கு இன்று (23.01) ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு ஜூன் 27 ஆம் திகதி கிடைக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் பேசிய பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, வெளிநாடுகளுக்கு செல்ல அவசரமாக கடவுச்சீட்டுகள் தேவைப்படுபவர்களுக்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழு விண்ணப்பதாரரின் அவசரத் தேவையை உறுதிசெய்து அதே நாளில் வெளிநாட்டு பாஸ்போர்ட்டை வழங்கும். “உரிமம் பெறுவதற்கான நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது” எனக் கூறியுள்ளார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!