ஆசியா

ஹொங்கொங்கில் பேருந்து ஓட்டுநரின் மார்பில் பாய்ந்த இரும்பு கம்பி – உயிர் தப்பிய பயணிகள்

ஹொங்கொங்கில் தாய் லாம் சுரங்கம் அருகே நடந்த விபத்தில், ஓர் இரும்புக் கம்பி பறந்து வந்து பேருந்து ஓட்டுநரின் மார்பில் பாய்ந்தது.

65 வயதான ஓட்டுநர் அதற்குப் பிறகும் நிதானம் இழக்காமல் இழக்காமல் பேருந்தைப் பாதுகாப்பாக நிறுத்தியதால், ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

நேற்று முன்தினம் மாலை சுமார் 5.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பேருந்து சுரங்கத்திலிருந்து வெளியேறும் தருணத்தில், சுமார் 2 மீட்டர் நீளமுடைய இரும்புக் கம்பி ஒன்று பறந்து வந்து முன்புறக் கண்ணாடியைத் துளைத்து, ஓட்டுநரின் இடது மார்பில் பாய்ந்தது.

அதிர்ச்சி தரும் அந்த சூழ்நிலையில் கூட, ஓட்டுநர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு பேருந்தை சாலை ஓரத்தில் நிறுத்தினார். பின்னர் கத்தி உதவி கோரினார். உடனே ஒரு பயணி பொலிஸாரையும் மருத்துவ சேவையையும் தொடர்புகொண்டார்.

மருத்துவ குழு துரிதமாக சம்பவ இடத்துக்கு வந்து, ஓட்டுநருக்கு முதலுதவி வழங்கியது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய நிலை ஸ்திரமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய விசாரணையின் அடிப்படையில், அந்த இரும்புக் கம்பி அருகில் சென்ற மற்றொரு வாகனத்திலிருந்து தவறவிட்டு விழுந்திருக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. பொலிஸார் இதுகுறித்து மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவத்தின் போது பேருந்தில் இருந்த பயணிகளில் யாரும் காயமடையவில்லை. பேருந்தை வீதியோரம் நிதானமாக நிறுத்திய ஓட்டுநரின் துணிச்சலுக்கும் செயல்முறைக்கும் பேருந்து நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.

(Visited 2 times, 2 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்