இலங்கை

இளங்குமரனின் உரையால் சபையில் கடுப்பான அர்ச்சுனா!

கெமராவுக்கு முன்னால் வீரசனம் பேசுபவர், கெமராவுக்கு பின்னால் தமிழர்களை கொன்றொழித்தவர்களுடன் கூட்டு சேர்ந்து செயற்படுகின்றனர்.” என்று தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

“நாம் மக்களுக்கான அரசியல் செய்கின்றோம். சிலர் ஊடகங்களுக்காக அரசியல் செய்கின்றனர். அந்நபருக்கு ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற தமிழ் கலாசாரத்தைக்கூட பின்பற்ற தெரியாதுள்ளது.” எனவும் இளங்குமரன் எம்.பி. குறிப்பிட்டார்.

இளங்குமரன் எம்.பி. தனது உரையின்போது சிலர் தொடர்பில் கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தாலும் அவர் எவரினதும் பெயரை குறிப்பிட்டு விமர்சிக்கவில்லை.

எனினும், இளங்குமரனின் உரையை அடுத்து அர்ச்சுனா எம்.பி. ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பினார்.
“நான் தமிழன், சிங்கள மக்களை காதலிக்கின்றேன். விடயதானத்துக்கு பொருத்தமில்லாத விடயங்களை இளங்குமரன் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.” என்று அர்ச்சுனா குறிப்பிட்டார்.

(Visited 1 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!