இலங்கை

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்கு கடவுச்சீட்டு – கிழக்கு ஆளுநர் அறிவிப்பு!

இந்தியாவின் தமிழ் நாட்டில் வாழ்ந்துவரும் இலங்கை அகதிகளுக்கு கடவுச்சீட்டு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஓ லையில் நேற்று (23) ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இக்கருத்தை தெரிவித்தார்.

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து இடம்பெயர்ந்து இந்தியாவின் தமிழ்நாட்டில் 40 வருடங்களுக்குமேல் அகதிகளாக வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கை அகதிகளுக்கு சர்வதேச ரீதியாக பயணிக்கக்கூடிய கடவுச் சீட்டு வழங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்மூலம் தாங்கள் விரும்பிய நாடுகளுக்கு சென்று தங்கள் பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்ள முடியும் மேலும் தெரிவித்தார்.

(Visited 6 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content