இலங்கை செய்தி

‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட கொத்மலை பகுதிகளை மீளமைக்கும் சிரமதானப் பணிகள் ஆரம்பம்

‘டித்வா’ புயலினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கொத்மலை, பனங்கம்மன பகுதி மற்றும் மகா பீல்ல கால்வாய் ஆகியவற்றைச் சீரமைக்கும் பாரிய சிரமதானப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு மாதங்களாக நிலச்சரிவினால் துண்டிக்கப்பட்டிருந்த 20-ற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான பிரதான வீதியைச் சீரமைக்கும் பணிகள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்காக அனுராதபுரம் மற்றும் கினிகத்தேன பகுதிகளிலிருந்து வருகை தந்துள்ள சுமார் 2,000-ற்கும் மேற்பட்ட தொண்டர்கள், நாளை வரை இந்தப் பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

இதன் மூலம் அப்பகுதி மக்களின் நீண்டகால போக்குவரத்துத் துயரம் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Puvan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!