அரசியல் இலங்கை செய்தி

மாகாண சபைத் தேர்தல் முறை குறித்து ஆராய நாடாளுமன்ற தெரிவுக்குழு

மாகாணசபைத் தேர்தலை எந்த முறைமையின்கீழ் நடத்துவது என்பது தொடர்பில் ஆராய்வதற்கு விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான பிரேரணையை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு நாடாளுமன்ற விவகாரக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 6 ஆம் திகதி நாடாளுமன்றம்கூடும்வேளை, பிரேரணை அங்கீகாரத்துக்காக ஆளுங்கட்சியால் முன்வைக்கப்படும்.

மாகாண சபைத் தேர்தல் எந்த தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காகவே மேற்படி தெரிவுக்குழு அமைக்கப்படுகின்றது.

முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளையும் தமது அறிக்கையில் மேற்படி நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்வைக்கவுள்ளது.

மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உறுதியளித்திருந்தாலும், எல்லை நிர்ணயம் தொடர்பான பிரச்சினையால் அது சாத்தியப்படாமல் உள்ளது.

எனினும், பழைய முறைமையிலாவது தேர்தலை நடத்துமாறும், அதற்கு ஆதரவளிக்கப்படும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

இந்நிலையிலேயே தேர்தல் முறைமை குறித்து ஆராய தெரிவுக்குழு அமைக்கப்படுகின்றது.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!