அணுசக்தி கொள்கையை மாற்றுமா ஜப்பான் – புதிய பிரதமரிடம் இருந்து வந்த சாதகமான தகவல்!
ஜப்பானின் புதிய பிரதமர் சானே தகைச்சி (Sanae Takaichi) நாட்டின் பழைமையான அணுசக்தி அல்லாத கொள்கைகளில் சாத்தியமான மாற்றத்தை கொண்டுவர முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய மாற்றங்கள் அத்தகைய ஆயுதங்கள் நாட்டிற்கு கொண்டுவருவதற்கான தடைகளை திருத்த முயற்சிக்கலாம் என்ற ஊகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அணு ஆயுதங்களை வைத்திருக்கவோ, உற்பத்தி செய்யவோ அல்லது அதன் எல்லைக்குள் அறிமுகப்படுத்தவோ கூடாது என்ற மூன்று கொள்கைகள் ஜப்பானில் காலம் காலமாக பின்பற்றப்படுகிறது.
அந்த மூன்று கொள்கைகளும் ஜப்பானின் பாதுகாப்பு உத்தியின் வரவிருக்கும் திருத்தத்தில் பராமரிக்கப்படுமா என்று தன்னால் கூற முடியாது என சானே தகைச்சி (Sanae Takaichi) பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.
எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் ஒரு திட்டவட்டமான அறிக்கையை வெளியிடவோ அல்லது அது எப்படி மாறும் என்பதை சொல்லவோ முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இப்போதைக்கு, அரசாங்கம் அவற்றை ஒரு கொள்கை வழிகாட்டியாகக் கடைப்பிடிக்கிறது என்றும் அவர் மேலும் கூறினார்.
தகைச்சியின் இந்த கருத்துக்கள் எதிர்காலத்தில் அணுசக்தி கொள்கையை ஜப்பான் திருத்தக்கூடும் என்ற ஊகத்தை எழுப்பியுள்ளது.
சீனா தனது அணு ஆயுதக் களஞ்சியத்தை விரிவுபடுத்தும்போது, தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த, அமெரிக்கா நீர்மூழ்கிக் கப்பல்கள் அல்லது பிற தளங்களில் அணு ஆயுதங்களை ஜப்பானுக்குள் கொண்டு வர அனுமதிக்கப்பட வேண்டும் என்று தகைச்சியின் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சிக்குள் உள்ள சில சட்டமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
இருப்பினும் ஜப்பானில் உள்ள அணுசக்தி எதிர்ப்பு குழுக்கள் அத்தகைய நடவடிக்கைகளை கடுமையாக எதிர்க்கின்றன.
இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் குண்டுவெடிப்புகளின் பயங்கரங்கள் காரணமாக, ஜப்பானிய மண்ணில் அவற்றின் இருப்பு உட்பட, அணு ஆயுதங்களை எதிர்க்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அத்துடன் இந்த கொள்கை நீண்டகாலமாகவே கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.





