இலங்கை

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம் – அடுத்த வாரம் இறுதி முடிவு!

இலங்கையில் புதிய பயங்கரவாத தடைச்சட்டம் எதிர்வரும் அக்டோபர் 28 ஆம் திகதி இறுதி செய்யப்படும் என நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதில் உள்ள தாமதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது அவர் பதிலளிக்கையில், “பயங்கரவாத தடைச்சட்டத்தால் அதிகளவில் பாதிக்கப்பட்டவர்களே நாங்கள். அதனை தக்கவைக்கும் எண்ணம் இல்லை. எனினும், சட்டமொன்றை இரத்து செய்யும்போது அதனை விஞ்ஞானப்பூர்வமாக மேற்கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டார்.

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்ட பின்னர் அமுல்படுத்தவுள்ள புதிய சட்டவரைவை தயாரிப்பதற்குரிய குழு, அக்டோபர் 28 ஆம் திகதி கூடி சட்டமூலத்தை இறுதிப்படுத்தி கையளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் பொதுமக்கள் கருத்துக்காக ஒரு மாத காலத்துக்கு சமூகத்தில் வெளியிடப்படும்.

ஒக்டோபர் 28 ஆம் திகதி குழு அறிக்கை வழங்கினால், சட்டமூலம் தயார் என்ற அறிவிப்பை நவம்பர் முதல் வாரத்தில் விடுக்க முடியும். நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு புதிய சட்டம் வரும்வரை இருக்கும் சட்டத்தைப் பயன்படுத்த நேரிடும் என நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

(Visited 10 times, 10 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்